கடலில் மிதந்து கொண்டிருந்த அழகுசாதனப் பொருட்கள் கடற்படையால் மீட்பு
சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும், கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த அழகுசாதனப் பொருட்கள் மன்னார் பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.
மன்னாரின் கிராஞ்சி கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த அழகுசாதனப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (2025.04.16) இடம்பெற்றுள்ளது.
தேடுதல் நடவடிக்கை
கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
இதன்போதே சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3200 ஷம்போ பக்கெட்டுகள், 376 அழகுசாதனப் பொருட்கள் மற்றும் 75 அழகுசாதன சவர்க்காரங்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர்.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையால் கைப்பற்றப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஜெயபுரம் பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.




“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
