உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்ட 13 பக்க அறிக்கை

CID - Sri Lanka Police Sri Lanka Easter Attack Sri Lanka
By Dharu Apr 17, 2025 01:07 AM GMT
Report

கடந்த 2019ஆம் ஆண்டு சர்வதேசத்தை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு 06 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், நீதியை நிலைநாட்ட இன்னும் பல அம்சங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என அமைதி மையத்தின் ஆராய்ச்சிப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த விடயங்கள் தொடர்பாக  சமூக மத மையத்தின் (CSR) நிர்வாக இயக்குநர் பாதிரியார் ரோஹன் சில்வாவால் சமர்பிக்கப்ட்ட 13 பக்க அறிக்கை தொடர்பில், நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட பத்திரிகையாளர் தரிந்து ஜெயவர்தன தெரிவித்த கருத்துக்கள் பல்வேறு விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

பாதிரியார் ரோஹன் சில்வாவால் தயாரிக்கப்பட்டு, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவிடம் சமர்ப்பிக்கப்பட்ட குறுகிய அறிக்கை, எதிர்கால விசாரணைகளில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு மேலும் விசாரிக்கப்பட வேண்டிய பல விடயங்களை சுட்டிக்காட்டுகிறது என தரிந்து ஜெயவர்தன இதன்போது தெரிவித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விசாரணை தொடர்பில் உறுதி மொழியை மீறிய ரணில்: வெளியான தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விசாரணை தொடர்பில் உறுதி மொழியை மீறிய ரணில்: வெளியான தகவல்

05 பிரச்சினைகள்

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, குறைந்தது 05 பிரச்சினைகள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே இந்த அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்ட 13 பக்க அறிக்கை | Controversial Information Exposed Easter Attacks

1. தெஹிவளையில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அப்துல் லத்தீப் முகமது ஜமீல் தொடர்பான உண்மைகள்

2. சாராவுடன் தொடர்புடைய அபுஹிந்த் தொடர்பான உண்மைகள்

3. கல்முனையில் உள்ள சாய்ந்தமருது  கிராமத்தின் மீதான தாக்குதலின் போது தப்பி ஓடியதாக சந்தேகிக்கப்படும் சாரா ஜாஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரன் மற்றும் சாய்ந்தமருது குண்டுவெடிப்பு தொடர்பான உண்மைகள்

4. வெளிநாட்டில் இருந்தபோது சனல் ஃபோர் நிகழ்ச்சியில் வெளிப்படுத்திய ஹன்சிர் அசாத் மௌலானாவின் அறிக்கைகள் தொடர்பான உண்மைகள்

5. தாக்குதலுக்கு முன்னர் எச்சரிக்கைகள் மீது செயல்படத் தவறியமை மற்றும் அப்துல் லத்தீப் முகமது ஜமீல் பற்றிய உண்மைகள் என ஐந்து விடயங்களை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுவதாக தரிந்து தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு அன்று நடந்த தொடர் கொடூரமான தாக்குதல்களின் போது தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெடிகுண்டை வெடிக்க முயன்று பின்னர் தெஹிவளையில் உள்ள ட்ராபிகல் இன்னில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அப்துல் லத்தீப் முகமது ஜமீல் குறித்து பல சந்தேகத்திற்கிடமான உண்மைகள் உள்ளன என தரிந்து கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை பிரித்தானிய பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை பிரித்தானிய பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை

தெஹிவளையில் நடந்த குண்டுவெடிப்பு

1. தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில், புலனாய்வு அமைப்புகள் 2015 முதல் ஜமீல் மீது கவனம் செலுத்தி வருவதாக தெரியவந்தது.

இந்தத் தாக்குதலுக்கு முன்னர், புலனாய்வு சேவை, இராணுவ புலனாய்வு இயக்குநரகம் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) ஆகியவை ஜமீலை விசாரித்து, கண்காணித்து வந்தன.

இதுவரை தெரியவந்துள்ளபடி, மேற்கண்ட மூன்று நிறுவனங்கள் ஜமீலை விசாரித்த போதிலும், இந்தத் தாக்குதல் குறித்த முன் எச்சரிக்கைகளைப் பெறவோ அல்லது தாக்குதலைத் தடுக்கவோ அவர்கள் தவறிவிட்டனர். ஜனாதிபதி விசாரணை ஆணையம், நீதிபதி விஜித் மலல்கோட தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழு, நாடாளுமன்றத் தேர்வுக் குழு மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் வெளிப்படுத்திய உண்மைகளின் அடிப்படையில், ஜமீல் தொடர்பாக பின்வரும் உண்மைகள் மேலும் விசாரிக்கப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்ட 13 பக்க அறிக்கை | Controversial Information Exposed Easter Attacks

2. தாஜ் சமுத்ரா ஹோட்டலின் பாதுகாப்பு மேலாளர், ஜனாதிபதி விசாரணை ஆணையத்தில் சாட்சியமளித்தார், ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், முந்தைய நாள் நள்ளிரவு 12 மணி வரையிலும் ஹோட்டலுக்குச் சென்றவர்களின் பெயர்ப் பட்டியலை மாநில புலனாய்வுப் பிரிவு மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கு அனுப்புவது ஒரு பொதுவான நடைமுறையாகும்.

ஏப்ரல் 20, 2019 அன்று மாலை, ஜமீல் வந்து தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஒரு அறையை முன்பதிவு செய்தார். ஏப்ரல் 20, 2019 அன்று நள்ளிரவு 12 மணிக்குள் முன்பதிவு செய்யப்பட்ட அறைகளின் பட்டியலை அவர் 21 ஆம் தேதி காலை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பியிருந்தார். அதன்படி, அன்று காலை இந்தப் பட்டியலில் மாநில புலனாய்வு சேவை ஜமீல் என்ற நபரை அடையாளம் கண்டுள்ளதா, அப்படியானால், இது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை விசாரிக்க வேண்டியது அவசியம்.

3. ஹோட்டலில் அறைகளை முன்பதிவு செய்யும் அனைவரின் தேசிய அடையாள அட்டை எண்களையும் ஹோட்டலின் தரவு அமைப்பில் உள்ளிடுவது கட்டாயம் என்று ஹோட்டலின் பாதுகாப்பு மேலாளர் ஜனாதிபதி ஆணையத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், ஜமீலின் தேசிய அடையாள அட்டை எண் அமைப்பில் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது. ஜமீலின் தேசிய அடையாள அட்டை எண் உள்ளிடப்படவில்லையா அல்லது உள்ளிடப்பட்ட பிறகு யாராவது அதை நீக்கினார்களா, தேசிய அடையாள அட்டை எண் முதலில் உள்ளிடப்படவில்லை என்றால், அது ஒரு கவனக்குறைவா அல்லது ஆலோசனையின் பேரில் அல்லது ஒருவரின் செல்வாக்கின் கீழ் செய்யப்பட்டதா, மற்றும் தேசிய அடையாள அட்டை எண் தரவு அமைப்பில் உள்ளிடப்பட்டு பின்னர் யாரால், எந்த காரணத்திற்காக அகற்றப்பட்டது என்பதை விசாரிக்க வேண்டியது அவசியம்.

4. ஜமீல் 20 ஏப்ரல் 2019 அன்று ஹோட்டலுக்கு வருவதற்கு முன்பு, ஏப்ரல் 17, 2019 அன்று தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு ஒரு சந்தேகத்திற்கிடமான நபர் வந்ததாக ஜனாதிபதி விசாரணை ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி, இந்தத் தாக்குதலுக்கு முன்னும் பின்னும் வேறு சந்தேகத்திற்கிடமான நபர்கள் ஹோட்டலுக்கு வந்தார்களா என்பது குறித்து முறையான விசாரணை இல்லாததால், அது மேலும் விசாரிக்கப்பட வேண்டும்.

5. ஏப்ரல் 20, 2019 அன்று மாலை 4.17 மணியளவில் அறையை முன்பதிவு செய்த ஜமீல், ஹோட்டல் அறைக்குச் சென்று மீண்டும் ஹோட்டலை விட்டு வெளியேறி, ஏப்ரல் 21, 2019 அன்று காலை திரும்பினார்.

ஜனாதிபதி ஆணையத்தில், அவர் காலையில் அறைக்குச் சென்று அறையைத் திறக்க புதிய அட்டையைக் கேட்டதாகத் தெரியவந்தது. முதல் கட்டமாக அவருக்கு வழங்கப்பட்ட அட்டைக்கு என்ன ஆனது என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தப்படவில்லை.

அதன்படி, இந்த விடயமும் விசாரிக்கப்பட வேண்டும்” என பல விடயங்களை தரிந்து முன்வைத்துள்ளார்.

சாரா என்னும் புலஸ்தினி மரணம்!வெளியான உறுதிப்படுத்தப்பட்ட தகவல் 

சாரா என்னும் புலஸ்தினி மரணம்!வெளியான உறுதிப்படுத்தப்பட்ட தகவல் 

சாய்ந்தமருது கிராமத்தின் மீதான தாக்குதல்

மேலும், இந்த குண்டுவெடிப்பு நடந்த மறுநாள்,  கல்முனை தலைமையகக் பொலிஸ் நிலையத்தின் காவல் ஆய்வாளர், கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஒரு பி அறிக்கையைச் சமர்ப்பித்து, வெடிப்பில் 16 பேர் இறந்ததாக ஏப்ரல் 27, 2019 அன்று, அறிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்ட 13 பக்க அறிக்கை | Controversial Information Exposed Easter Attacks

இருப்பினும், 02 நாட்களுக்குப் பிறகு, மற்றொரு பொலிஸ் நிலைய அதிகாரி, அதாவது அம்பாறை தலைமையகக் காவல் ஆய்வாளர், அதே நீதிமன்றத்தில் உண்மைகளைப் முறைப்பாடளித்து சஹாரன் ஹாஷிமின் மனைவி மற்றும், சஹாரனின் மகளும் ஹாதியாவின் மகளும் மீட்கப்பட்டதாக தெரிவித்தார்.

தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குறித்த இருவரின் வாக்குமூலத்தை மே 3, 2019 அன்று காலை 11.30 மணிக்கு பொலிஸார் முதன்முறையாக பதிவு செய்தனர்.

இந்த வாக்குமூலம் 03 நாட்களாக பதிவு செய்யப்பட்டு,குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் சாரா ஜாஸ்மின் சாய்ந்தமருதில் இருந்ததாக தெரியவந்தது.

அதற்கு முன், சாரா ஜாஸ்மின் இறந்துவிட்டார் என்று நம்ப வைக்க 17 பேர் இறந்ததாக அம்பாறை தலைமையக பொலிஸ் ஆய்வாளர் அறிக்கை அளித்துள்ளதாக தரிந்து வெளிப்படுத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஹாதியாவிடமிருந்து உண்மைகள் வெளிப்படுவதற்கு முன்பு சாரா அங்கு இருந்தார் என்பது கண்டறியப்பட்டால், அது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது குண்டுவெடிப்பின் போது அந்தப் பகுதியிலிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் தப்பிச் சென்றதாக சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது யார் என்பது குறித்து இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. அதுவும் விசாரிக்கப்பட வேண்டும் என இதன்போது கூறப்பட்டுள்ளது.

அசாத் மௌலானா தொடர்பில் அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி!

அசாத் மௌலானா தொடர்பில் அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி!

அசாத் மௌலானா

வெளிநாட்டில் இருந்தபோது சனல் 4 தொலைக்காட்சியில் வெளிப்படுத்திய ஹன்சிர் அசாத் மௌலானாவின் அறிக்கைகள் தொடர்பான விஷயங்களும் இதன்போது வெளிப்படுத்தப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்ட 13 பக்க அறிக்கை | Controversial Information Exposed Easter Attacks

 மௌலானா ஹன்சிர் சாத்தின் அறிக்கை குறித்து சமூக மற்றும் அமைதி மையம் அளித்த முறைபாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அவரது அறிக்கைகளை விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவால் பகிரங்கப்படுத்தப்பட்டது.

அந்த அறிக்கையில், சாத் மௌலானாவுக்கும் சஹாரன் குழுவிற்கும் இடையே தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக தொடர்புடைய குழு குறிப்பிட்டுள்ளது.

 இந்த ஆவணத்தில் முன்னர் குறிப்பிட்டபடி, ஏப்ரல் 21, 2019 அன்று, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டு வெடிக்கவில்லை, அன்று காலை 8.51 முதல் 8.54க்கு இடைப்பட்ட நேரத்தில் ஜமீலுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அந்த அழைப்பிற்குப் பிறகு, ஜமீல் ஹோட்டலை விட்டு வெளியேறி தெஹிவளையில் உள்ள டிராபிகல் இன் விடுதிக்கு சென்று, பையை தெஹிவளையில் உள்ள ஒரு முஸ்லீம் பள்ளிவாசலில் இருந்துள்ளார். இதன்போது ஒரு நண்பர் வருவதற்காகக் காத்திருப்பதாக ஜமீல் மசூதியின் மௌல்வியிடம் கூறியதாக ஜனாதிபதி ஆணையத்தில் தெரியவந்தது.

சனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரித்த ஜனாதிபதி குழுவின் கூற்றுப்படி, தெஹிவளையில் அசாத் மௌலானாவின் சொந்தமான வீடு உள்ளது. எனவே ஜமீல் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இருந்து தெஹிவளையில் உள்ள எபானிசா மசூதிக்கு மௌலானாவைச் சந்திக்கச் சென்றாரா அல்லது அவரது பிரதிநிதியைச் சந்திக்கச் சென்றாரா என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை முக்வைக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு முன்னர் கிடைத்த தகவல்

மேலே குறிப்பிடப்பட்ட 04 முக்கிய விஷயங்களுக்கு மேலதிகமாக, ஏப்ரல் 21, 2019 அன்று பெறப்பட்ட உளவுத்துறை தகவல்களின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்ட 13 பக்க அறிக்கை | Controversial Information Exposed Easter Attacks

ஏப்ரல் 21, 2019 அன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஏப்ரல் 20, 2019 அன்று மாலை கிடைத்த தகவலின்படி, அப்போதைய கொழும்பு பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க அன்று இரவு 7.19 மணிக்கு கொழும்பு தெற்கு பொலிஸ் கண்காணிப்பாளர் நிஷாந்த சொய்சாவை அழைத்து, உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், தேவாலயங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், மொபைல் ரோந்துகளை அதிகரிக்கவும் கூறியதாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி ஆணையத்தில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக தெரியவந்தது.

கொழும்பு பேராயரின் அதிகாரப்பூர்வ இல்லமும் கொழும்பு தெற்குப் பிரிவில் உள்ளது.

இருப்பினும், இந்தத் தாக்குதல் குறித்த தகவல்களை பேராயரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வழங்காததற்காக சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என தரிந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, London, United Kingdom

21 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்கேணி, Bunde, Germany

24 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, காரைநகர் களபூமி, கொழும்பு, கனடா, Canada

24 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US