முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு விளக்கமறியல்

Colombo Akila Viraj Kariyawasam Bribery Commission Sri Lanka
By Dhayani Aug 05, 2026 10:57 AM GMT
Report

புதிய இணைப்பு

முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக (நிர்வாக சீர்திருத்தங்கள்) பணியாற்றிய காலத்தில் செய்த ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றியபோது, ​​அவர் தனது உத்தியோகப்பூர்வ பணியாளர்கள் என்று கூறி நான்கு ஊழியர்களைப் பணியமர்த்தினார் என இலஞ்ச ஆணைக்குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒருவர் தனது சொந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணிக்கு அனுப்பப்பட்டிருந்த வேளையில், மற்றொருவர் அலுவலகம் சாராத பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

அலுவல் ரீதியான பொறுப்புகள் வழங்கப்படாத போதிலும், அரச நிதியிலிருந்து மொத்தம் 2,768,836.14 ரூபாய் மதிப்பிலான சம்பளம் வழங்க அவரால் ஏற்பாடு செய்யப்பட்டதால், அரசிற்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இரண்டாம் இணைப்பு 

முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முதலாம் இணைப்பு

முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (05) காலை முன்னிலையாகியுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கானவே அகிலவிராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காகவே அகிலவிராஜ் காரியவசம் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சசிந்திர ராஜபக்ச மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சசிந்திர ராஜபக்ச மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

 

EPF சட்டத்தில் புதிய மாற்றங்கள் - எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

EPF சட்டத்தில் புதிய மாற்றங்கள் - எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

 

you may like this video

   

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US