கொழும்பில் உள்ள உணவகமொன்றில் துரித உணவில் காணப்பட்ட கரப்பான் பூச்சி
கொழும்பு - இரத்மலானையில் உள்ள உணவகம் ஒன்றில் இளைஞர்கள் குழு ஒன்று உட்கொண்ட துரித உணவில் (Egg Samosa) கரப்பான் பூச்சி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது, இளைஞர்கள் குழு ஒன்று பிரபல தொலைக்காட்சி நிகழ்வில் நடைபெற்ற இசை போட்டியில் பங்குபற்றி இடைவேளையின் போது குறித்த உணவகத்தில் உணவருந்த வருகை தந்த நிலையிலேயே இந்த அருவருப்பான சம்பவம் நடைபெற்றுள்ளது.
உணவக உரிமையாளரின் அசமந்த போக்கு
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இந்த உணவை உட்கொண்டமையால் வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.

இதுபற்றி விசாரிக்க சென்ற இளைஞர்கள் அசுத்தமான நிலையில் உணவு சமைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை, குறித்த உணவக உரிமையாளர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் உணவக ஊழியர்களும் அசமந்த போக்கில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam