பேரணியில் இருக்கை இல்லாமல் தடுமாறிய எதிர்க்கட்சியின் முக்கிய புள்ளி!
நுகேகொடையில் பேரணியில் அமர்வதற்கு இருக்கை இல்லாததால் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல சிறிது நேரம் அங்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நுகேகொடையில் எலிமஹான் ரங்க பீடத்தில், இலங்கை பொதுஜன பெரமுன மற்றும் பிற எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் பாரிய பேரணியொன்று இன்று (21.11.2025) இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், பேரணியில் கலந்துகொள்வதற்காக அங்கு சமூகமளித்த தலதா அத்துகோரலவுக்கு சிறிது நேரம் எந்தவொரு ஆசனமும் ஒதுக்கப்படாத நிலையே இருந்தது.
முன்வரிசையில் ஆசனம்
இதனையடுத்து, அவருக்கு முன்வரிசையில் ஆசனமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, சற்றுமுன்னர் ஆரம்பமான நுகேகொடை பேரணியில் பெருந்திரளான மக்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri
ஜனநாயகன் ஆதரவாக குரல் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்! சென்சார் போர்டு, பாஜகவுக்கு எதிராக பதிவு Cineulagam