இலங்கையின் மூன்று நிதி நிறுவனங்களுக்கு பெருந்தொகை அபராதம்
இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு, நிதி பரிவர்த்தனைகள் அறிக்கையிடல் சட்டத்திற்கு இணங்காத மூன்று நிதி நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது.
அதன்படி, அபராதத் தொகையாக மூன்று நிதி நிறுவனங்களிடமிருந்து மொத்தம் 14 மில்லியன் ரூபா அறவிடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்த அபராதத்தொகை அரசாங்க ஒருங்கிணைந்த நிதியில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நிதிப் புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் பணமோசடி
குறித்த அபராதத்தொகை 2023 செப்டெம்பர் 27 மற்றும் 2023 டிசம்பர் 31 வரையான காலப்பகுதியில் விதிக்கப்பட்டதாக நிதிப் புலனாய்வுப் பிரிவு மேலும் தெரிவிக்கிறது.
மேலும், நிதிப் புலனாய்வுப் பிரிவு இலங்கையில் பணமோசடியைத் தடுப்பதற்கும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவதற்குமான ஒழுங்குமுறை நிறுவனமாகச் செயற்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 10 நிமிடங்கள் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
