நுகேகொடை தொடர்பில் சபையில் இன்று பேசுபொருளான மற்றுமொரு விடயம்..!
புதிதாகத் திறக்கப்பட்ட பழுப்பு நிற சீனி விற்பனை நிலையம் தோல்வியடைந்திருப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கூறியதை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க நிராகரித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, இன்றையதினம் (21.11.2025) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதன்போது, அரசாங்கத்தின் மோசமான திட்டமிடல் மற்றும் செயற்படுத்தலை அவர் விமர்சித்தார்.
குறைந்த விலை
இதனையடுத்து, குறித்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சதுரங்க அபேசிங்க, குறித்த விற்பனை நிலையம் ஒன்பது நாட்களாக மட்டுமே செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

அத்துடன், 9 நாட்களில் 800,000 ரூபாவுக்கு அதிகமான வருமானம் அதனால் பெறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பழுப்பு நிற சீனியை, நுகர்வோருக்கு மேலும் அணுகக்கூடியதாகவும் குறைந்த விலையிலும் வழங்குவது எமது நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ Cineulagam