புதிய வாகனங்களை வாங்க காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் வாகனங்களின் விலைகள் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறக்குமதி வரிகள் மீதான 50 வீத கூடுதல் வரியை டிசெம்பர் 31 வரை நீடிக்கும் அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, இந்த நீடிப்பு காட்சியக விலைகளை கணிசமாக உயர்த்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, ஒரு சுசுகி வேகன் ஆர் சுமார் 500,000 ரூபா, ஒரு டொயோட்டா ரைஸ் 1 மில்லியன் ரூபா, ஒரு ஹோண்டா வெசல் 1.5 - 2 மில்லியன் ரூபா, ஒரு டொயோட்டா பிராடோ 3 மில்லியன் ரூபா, ஒரு லேண்ட் குரூசர் 5 மில்லியன் ரூபா மற்றும் ஒரு டபுள் கேப் 2 - 2.5 மில்லியன் ரூபா வரை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை அதிகரிப்பு..
அதேநேரம், தற்போது காட்சியகங்களில் உள்ள வாகனங்கள், மே 15இற்கு முன்னர் தொடங்கப்பட்ட கடன் கடிதங்களின் (LCs) கீழ் இறக்குமதி செய்யப்பட்டவை என்றும், அவற்றுக்கு கூடுதல் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், மே 15இற்குப் பிறகு திறக்கப்பட்ட கடன் கடிதங்களின் (LCs) கீழ் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அதிக வரி விதிக்கப்படும், இது விலை உயர்வுக்கு வழிவகுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
"கூடுதல் கட்டணம் நீட்டிக்கப்படாது என்று நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் பல்வேறு காரணங்களால் அது தொடரப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, வாகன விலைகளில் மேலும் உயர்வுகளை நாம் எதிர்பார்க்கலாம்" என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், "இதுவரை அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் 90 வீத கூடுதல் கட்டணத்திற்கு உட்படாத கடன் கடிதங்களின் கீழ் இருந்தன.
ஆனால் இப்போது புதிய வரியின் கீழ் வரும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கும் பணி தொடங்கியுள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.