கொழும்பில் பதற்றம்! முன்னாள் அமைச்சர் விமல் மற்றும் பொலிஸாருக்கு இடையில் கடும் மோதல்..
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் பொலிஸாருக்கு இடையில் மோதல் நிலை வெடித்துள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள போர் வீரர்கள் நினைவுத் தூபிக்கருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினருக்கும், பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது.
அனுமதி மறுப்பு
போர் வீரர்களை நினைவுகூரும் பொருட்டு மலர்க் கொத்துகளுடன், சென்ற விமல் வீரவன்ச மற்றும் அவருடைய குழுவினருக்கு நினைவிடத்திற்குள் செல்ல பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனால் கடும் கோபமடைந்த விமல் வீரவன்ச தரப்பு பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன், சம கால அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தது.
இதனையடுத்து பொலிஸாரின் தடையையும் மீறி உள்ள செல்ல முயன்ற விமல் வீரவன்ச தரப்பினை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸார் கடும் பிரயத்தனப்பட்டனர்.
இதன் காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது.
எவ்வாறாயினும், நினைவுத் தூபிக்கு உள்ளே செல்ல பொலிஸார் அனுமதிக்காததால், நினைவுத் தூபியின் வாயிலில் மலர்க் கொத்துக்களை வைத்து தங்களுடைய அஞ்சலியை விமல் வீரவன்ச தரப்பு செலுத்தினர்.
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தமிழகத்தில் விடுதலைப் புலிகளை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடு திரும்பியதும் கைது! - அர்ச்சுனா எம்பி பகிரங்கம்
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam