இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல்:சீனாவிடம் இலங்கை முன்வைத்துள்ள கோரிக்கை
யுவான் வாங் 5,கப்பல் தொடர்பான இராஜதந்திர பிரச்சினையை பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு செல்லாமல் நேரடியாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் மூலம் கையாளும் பணியை, இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அடுத்து இந்த கப்பலின் துறைமுக அழைப்பை ஒத்திவைக்குமாறு இலங்கை சீனாவிடம் கோரியுள்ளது.
சீன கப்பல் வருகை

சீனாவின் ஜியாங்யின் துறைமுகத்தில் இருந்து செல்லும் யுவான் வாங்-5 கப்பல் ஆகஸ்ட் 11ஆம் திகதி, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை துறைமுகமான ஹம்பாந்தோட்டைக்கு வரவிருந்தது. இது இந்தியாவுடனான இராஜதந்திர முறுகலுக்கு வழிவகுத்துள்ளது.
இதேவேளை, இந்த பிரச்சினை, ஒத்திவைக்கப்படுவதால் நாடு மோசமான விளைவுகளை சந்திக்கும் என்று பீய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தமையை அடுத்தே இலங்கை அரசாங்கம் இப்போது சீனத் தூதரகத்துடன் இந்தப் பிரச்சினையை நேரடியாகக் கையாள்கிறது.
| சர்ச்சையை ஏற்படுத்திய சீனக் கப்பல் தொடர்பில் கமால் குணரத்ன வெளியிட்ட தகவல் |
| சீன கப்பல் தொடர்பில் இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை-செய்திகளின் தொகுப்பு |
| சீன கப்பலுக்கு அனுமதி வழங்க வேண்டும்: சுயாதீன கட்சிகள் கோரிக்கை |
| சர்ச்சைக்குரிய சீனக்கப்பல் தொடர்பில் வெளியான தகவல் |
20 வயதில் திருமணம், பணம் நகை மோசடி, தகுதியற்றவர்... சின்ன மருமகள் சீரியல் நடிகை அதிர்ச்சி பதிவு Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri