புலம்பெயர் தமிழர்களுக்காக கைது செய்யப்பட்ட இருவர்: மொட்டு கட்சி பகிரங்கம்
புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காகவே முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையானை சிறையில் அடைத்துள்ளனர் என மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
புதிய வருட ஆரம்பத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
டக்ளஸ்- பிள்ளையான்
இந்த நாட்டில் இருந்த 30 வருட யுத்தத்தை நிறைவு செய்வதற்கு தலைமை தாங்கிய மற்றும் அதற்கு ஒத்துழைத்த முப்படையினர் மறக்கப்பட்டுள்ளனர்.
யுத்தத்திற்கு உதவி செய்த அதுவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாது தமிழ் தரப்பில் டக்ளஸ்,பிள்ளையான் எம் பக்கம் நின்றனர்.
இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டதால் இன்று தண்டிக்கப்படுகின்றனர்.

இதனால் நாங்கள் இன்று நன்றி மறந்த நன்றியறிதல் அற்ற இனமாக மாறி விட்டோமா என்ற கேள்வியே கேட்க வேண்டியுள்ளது.
இந்த நாட்டில் பயங்கரவாத போரை முடிவுக்கு கொண்டுவர செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து அதற்கு பக்க பலமாக செயற்பட்டவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri