தொடருந்து பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
புதிய இணைப்பு
பிரதான மார்க்கத்தில் தொடருந்துகளை இயக்குவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத் தகவலை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெயங்கொடை மற்றும் பல்லேவெல தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பு – பதுளை மார்க்கத்தில், கினிகம ஹில்லோயாவிற்கு இடையில் இன்று தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

தொடருந்து பாதையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதன் காரணமாகவே போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து தடை

இதனால் இன்று (08.11.2023) தொடருந்து சேவையில் தடைப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பண்டாரவளை தொடருந்து நிலைய ஊழியர்கள் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri