ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி
ஓய்வூதியதாரர்களுக்கு போதுமான நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கையால் எந்தத் மாற்றமும் இல்லை பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கான ஏற்பாடுகளை ஒதுக்கி அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு, அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தகவலை இன்று (08.11.2023) பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியர்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், (31.12.2015) க்கு முன்னர் மற்றும் (01.01.2016) முதல் (01.01.2020) வரை ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதிய திருத்தத்திற்காக வருடாந்தம் 67,608 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மாநில நிர்வாக சுற்றறிக்கை 03/2016 இன் விதிகளின்படி, இரண்டு நிகழ்வுகளில் (02) ஓய்வூதியங்களை மாற்றியமைக்க அரசாங்கத்தால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கான ஏற்பாடுகளை ஒதுக்கி அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
போதுமான நிதி ஒதுக்கீடு
ஆனால் நிதி மற்றும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு, போதுமான நிதி ஒதுக்கீடுகளை ஒதுக்க முடியவில்லை.
மேலும் அனைத்து ஓய்வூதியதாரர்களும் போதுமான நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கையால் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது, ஆனால் எந்தத் மாற்றமும் இல்லை என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 21 மணி நேரம் முன்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா... புதிய ஜோடி, புரொமோ இதோ Cineulagam
