முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீதான வழக்கு விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Mullaitivu Sri Lanka Sri Lanka Magistrate Court Journalists In Sri Lanka
By Independent Writer Jan 16, 2025 11:15 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report
Courtesy: சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீதான வழக்கானது மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை முகாமின் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர் முல்லைத்தீவு பொலிஸாரால் 20.04.2019 கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

கடந்த பல வருடங்களாக வழக்கு இடம்பெற்று வருகின்ற நிலையில் வழக்குடன் தொடர்புடைய கடற்படை புலனாய்வாளர் அவர்களுக்கு பொறுப்பான அதிகாரி சாட்சியமளிப்பதற்காக வழக்கு விசாரணைகள் 2025.01.16 இன்றைய திகதிக்கு தவணையிடப்பட்டிருந்தது.

சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பி சென்ற சந்தேக நபர்கள்!

சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பி சென்ற சந்தேக நபர்கள்!

விசாரணைகள்

இந்நிலையில், இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் வழக்கு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீதான வழக்கு விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Case Against Mullaitivu Journalist Update

இதன் போது ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் சார்பாக சட்டத்தரணி வி.எஸ்.எஸ் தனஞ்சயன் முன்னிலையாகியிருந்தார்.

வழக்குடன் தொடர்புடைய கடற்படை புலனாய்வாளர் அவர்களுக்கு பொறுப்பான அதிகாரி மன்றில் சாட்சியமளித்தார் தொடர்ந்து குறுக்கு விசாரணைக்காக குறித்த வழக்கு மீண்டும் 2025.04.03 அன்று தவணையிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 07.04.2019 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தனர்.

இதன் போது செல்வபுரம் பேருந்து நிலையத்தில் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும், ஊடகவியலாளர்களையும் இனம் தெரியாத நபர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்ததோடு தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்துள்ளார்.

முல்லைத்தீவில் விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர்

முல்லைத்தீவில் விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர்

உண்மைக்கு புறம்பான கருத்து

 ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த நபரை அடையாளப்படுத்த முற்பட்டவேளை ஊடகவியலாளாரான சண்முகம் தவசீலன் தலையிட்டு அந்த நபர் யார் என வினவியபோது, அதற்கு அவர் யார் என சொல்ல மறுத்து இடத்தினை விட்டு தப்பி ஓடிய போது ஆர்ப்பாட்டக்காரர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அவர் போது தான் கடற்படை அதிகாரி என தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீதான வழக்கு விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Case Against Mullaitivu Journalist Update

அதனை தொடர்ந்து, முல்லைத்தீவு பொலிஸாரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது அவர்கள் அங்கு வர தாமதமாகியுள்ளது.

இதன்போது அந்த  நபரை வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று, அவர் கடற்படையினை சேர்ந்தவரா என வினவப்பட்டுள்ளது.

மேலும் அவர் கடற்படையினர் தான் என உறுதிப்படுத்தப்பட்டதும், அங்கு வருகை தந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தொடர்ந்து குறித்த கடற்படை அதிகாரி சம்பவ தினத்தன்று மாலை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு ஒன்னை பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 20.04.2019 அன்று ஊடகவியலாளர்  முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்ப்பட்டிருந்தார்.

இதன்கமைய நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில், அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு வழக்கு விசாரணைகள் தொடந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்து ஞானலிங்கேச்சுரத்தில் கொண்டாடப்பட்ட தமிழ்ப்பொங்கல்

சுவிட்சர்லாந்து ஞானலிங்கேச்சுரத்தில் கொண்டாடப்பட்ட தமிழ்ப்பொங்கல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US