முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீதான வழக்கு விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Mullaitivu Sri Lanka Sri Lanka Magistrate Court Journalists In Sri Lanka
By Independent Writer Jan 16, 2025 11:15 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report
Courtesy: சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீதான வழக்கானது மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை முகாமின் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர் முல்லைத்தீவு பொலிஸாரால் 20.04.2019 கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

கடந்த பல வருடங்களாக வழக்கு இடம்பெற்று வருகின்ற நிலையில் வழக்குடன் தொடர்புடைய கடற்படை புலனாய்வாளர் அவர்களுக்கு பொறுப்பான அதிகாரி சாட்சியமளிப்பதற்காக வழக்கு விசாரணைகள் 2025.01.16 இன்றைய திகதிக்கு தவணையிடப்பட்டிருந்தது.

சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பி சென்ற சந்தேக நபர்கள்!

சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பி சென்ற சந்தேக நபர்கள்!

விசாரணைகள்

இந்நிலையில், இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் வழக்கு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீதான வழக்கு விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Case Against Mullaitivu Journalist Update

இதன் போது ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் சார்பாக சட்டத்தரணி வி.எஸ்.எஸ் தனஞ்சயன் முன்னிலையாகியிருந்தார்.

வழக்குடன் தொடர்புடைய கடற்படை புலனாய்வாளர் அவர்களுக்கு பொறுப்பான அதிகாரி மன்றில் சாட்சியமளித்தார் தொடர்ந்து குறுக்கு விசாரணைக்காக குறித்த வழக்கு மீண்டும் 2025.04.03 அன்று தவணையிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 07.04.2019 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தனர்.

இதன் போது செல்வபுரம் பேருந்து நிலையத்தில் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும், ஊடகவியலாளர்களையும் இனம் தெரியாத நபர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்ததோடு தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்துள்ளார்.

முல்லைத்தீவில் விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர்

முல்லைத்தீவில் விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர்

உண்மைக்கு புறம்பான கருத்து

 ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த நபரை அடையாளப்படுத்த முற்பட்டவேளை ஊடகவியலாளாரான சண்முகம் தவசீலன் தலையிட்டு அந்த நபர் யார் என வினவியபோது, அதற்கு அவர் யார் என சொல்ல மறுத்து இடத்தினை விட்டு தப்பி ஓடிய போது ஆர்ப்பாட்டக்காரர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அவர் போது தான் கடற்படை அதிகாரி என தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீதான வழக்கு விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Case Against Mullaitivu Journalist Update

அதனை தொடர்ந்து, முல்லைத்தீவு பொலிஸாரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது அவர்கள் அங்கு வர தாமதமாகியுள்ளது.

இதன்போது அந்த  நபரை வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று, அவர் கடற்படையினை சேர்ந்தவரா என வினவப்பட்டுள்ளது.

மேலும் அவர் கடற்படையினர் தான் என உறுதிப்படுத்தப்பட்டதும், அங்கு வருகை தந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தொடர்ந்து குறித்த கடற்படை அதிகாரி சம்பவ தினத்தன்று மாலை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு ஒன்னை பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 20.04.2019 அன்று ஊடகவியலாளர்  முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்ப்பட்டிருந்தார்.

இதன்கமைய நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில், அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு வழக்கு விசாரணைகள் தொடந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்து ஞானலிங்கேச்சுரத்தில் கொண்டாடப்பட்ட தமிழ்ப்பொங்கல்

சுவிட்சர்லாந்து ஞானலிங்கேச்சுரத்தில் கொண்டாடப்பட்ட தமிழ்ப்பொங்கல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US