ரகித ராஜபக்ச - சரித் உட்பட மூவருக்கு விளக்கமறியல்.. சற்றுமுன் வெளியான அறிவிப்பு
ரகித ராஜபக்ச, சரித் அபேசிங்க, மற்றும் முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் அருண வருணஹண்டிக ஆகியோர் ஜூலை 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹரக் கட்டாவின் மனைவி மற்றும் மிடிகம ருவன் என்ற பாதாள உலக கும்பலை சேர்ந்தவருக்கு எதிரான விசாரணைகளை எளிதாக்குவதாக உறுதியளித்து, அவர்களிடமிருந்து 12 கோடி ரூபாய் இலஞ்சம் பெறப்பட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஹரக்கட்டா என்று அறியப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான நதுன் சிந்தக விக்ரமரத்ன, மடகாஸ்கரில் கைது செய்யப்பட்ட பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டிருந்தார்.
நீண்டநேர விசாரணை
இதற்கிடையில், 2023 மார்ச் மாதத்தில், அப்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச, தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க, மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் பணிப்பாளர் அருண வருணஹண்டிக ஆகியோர் துபாய் நாட்டிற்குச் சென்றிருந்ததாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவர்கள் அதே விமானத்தில் துபாய்க்குச் சென்று, போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டாவின் மனைவியான மதுஷிகா மதுவந்தி மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான மிடிகமா ருவன் ஆகியோரைச் சந்தித்ததாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மூன்று சந்தேக நபர்களும் இன்று காலை இலஞ்ச ஆணையத்தால் அவர்களது வீடுகளில் கைது செய்யப்பட்டனர்.
எட்டு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின்னர், அவர்கள் இன்று பிற்பகல் கொழும்பு பிரதான நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டனர்.