சடலங்களைத் தகனம் செய்ய இலங்கையிலும் காட்போட் அட்டை சவப்பெட்டி
இலங்கையர்களும் உடலங்களைத் தகனம் செய்ய காட்போட் அட்டை சவப்பெட்டிகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பின் தெஹிவளை - கல்கிஸ்ஸ நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில், தொழிலாளர்கள் நீண்ட அட்டைப் பெட்டிகளைத் தயாரிக்கின்றனர்.
இவை நாட்டில் கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சவப்பெட்டிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த சவப்பெட்டி மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் ஆனது. அத்துடன் பலகைகளால் தயாரிக்கப்படும் சவப்பெட்டிகளின் உற்பத்திச் செலவின் ஆறில் ஒரு பங்கு குறைவானதாகும் என்று இந்த சவப்பெட்டியை இலங்கையில் முதலில் அறிமுகம் செய்துள்ள அரச பணியாளரான பிரியந்த சஹபந்து தெரிவித்துள்ளார்.
கோவிட் தாக்கம் காரணமாக இலங்கையின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிலர் தங்கள் அன்புக்குரியவர்களை தகனம் செய்யும் போது இந்த அட்டை சவப்பெட்டிகளைத் தேர்வு செய்கிறார்கள்.
தற்போது, இலங்கையில் பல்வேறு காரணங்களால் நாளாந்தம் சராசரியாக 400 பேர் இறக்கின்றனதாக தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகரசபையின் உறுப்பினர் சஹபந்து கூறியுள்ளார். 400 சவப்பெட்டிகளை உருவாக்க, 250 முதல் 300 மரங்களை வெட்ட வேண்டும்.
எனவே அந்த சுற்றுச்சூழல் அழிவைத் தடுக்க, இந்த கருத்தை சபையின் சுகாதாரக் குழுவிடம் முன்மொழிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் வைரஸ் பரவியதால், மக்கள் விலை உயர்ந்த பலகைச் சவப்பெட்டிகளுக்கு பணம் கொடுப்பது கடினம் என்று அவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு காட்போட் அட்டை சவப்பெட்டிக்கும் இலங்கையில் சுமார் 4,500 இலங்கை ரூபாய் செலவாகும், ஆனால் ஒரு மலிவான பலகைச் சவப்பெட்டிக்கு 30,000 ரூபா செலவிடப்படுகிறது.
இதனுடன் ஒப்பிடும்போது காட்போட் அட்டை சவப்பெட்டி மிகவும் மலிவானது. காட்போட் சவப்பெட்டியில் 100 கிலோகிராம் வரையிலான நிறையுடைய உடலங்களை வைத்திருக்க முடியும்.
2020ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து சுமார் 350 அட்டை சவப்பெட்டிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என சஹபந்து குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 15 நிமிடங்கள் முன்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
