கனடாவில் குறைவடைந்துள்ள வாகன கொள்ளை சம்பவங்கள்
கனடாவில்(Canada) வாகன கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்நாட்டு காப்புறுதி மோசடி தவிர்ப்பு பிரிவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் வாகன கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை 17 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேட பொலிஸ் படையணி
கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் இவ்வாறு வாகன கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
எல்லை பாதுகாப்பு கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டமை, பொலிஸாரின் விசாரணைகள், அரசாங்கத்தின் நடவடிக்கை மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு போன்ற காரணிகளினாலே வாகன கொள்ளை சம்பவங்கள் குறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கூட்டு முயற்சியின் மூலம் வாகன கொள்ளை சம்பவங்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் பொலிஸார் வாகன கொள்ளை தடுப்பு தொடர்பிலான விசேட பொலிஸ் படையணிகளை நிறுவி நடவடிக்கை எடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri
