பிரித்தானிய அரசர் சார்லஸால் வழங்கப்பட்ட விசேட கடிதம்: ஜனாதிபதிக்கு வழங்கிய இளவரசி ஆன்
பிரித்தானியாவின் இளவரசி ஆன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்லஸிடமிருந்து விசேட செய்தியொன்றை வழங்கியுள்ளார்.
“எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் உங்களுக்கும் இலங்கை மக்களுக்கும் எனது அன்பான சகோதரி, இளவரசி ராயல் அவர்களின் வருகையால் குறிக்கப்படும் எனது வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.” செய்தியில் என குறித்த நெய்தியில் கூறப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (10) ராயல் ஹைனஸ் இளவரசி ஆன், அவரது கணவர் வைஸ் அட்மிரல் சர் திமோதி லோரன்ஸ் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிநேகபூர்வ உரையாடல்
இளவரசி ஆன், உள்ளிட்ட தூதுக்குழுவினரை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வரவேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வருகை தந்த அரச குடும்பத்தினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டனர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு விருந்தினர்களின் நினைவுப் புத்தகத்தில் இளவரசி ஆன் கையொப்பமிட்டு விழாவைக் குறித்தார். இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 3 மணி நேரம் முன்
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam
சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan