காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவி கைது: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம்

Missing Persons Sri Lankan Tamils United Kingdom
By Dharu Jan 11, 2024 03:08 PM GMT
Report

வவுனியாவில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவி கைது செய்யப்பட்டதை தாம் கண்டிப்பதாக பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டொனாக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கு தண்டப்பணம் விதிப்பு

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கு தண்டப்பணம் விதிப்பு

நீதிமன்ற விசாரணை

“காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குடும்பங்களின் தலைவி கைது செய்யப்பட்டதை நான் கண்டிக்க விரும்புகிறேன்.

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவி கைது: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம் | Siobhan Mcdonough For Sri Lanka Police Action

நீதிமன்ற விசாரணையில் கலந்து கொள்ள ஒரு பிரதிநிதியை அனுப்புமாறு வெளியுறவு செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வேண்டும்.” என சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்பாறை - மட்டக்களப்பில் தொடரும் கன மழை: நீர் நிலைகளில் இருந்து வெளியேறும் முதலைகள்

அம்பாறை - மட்டக்களப்பில் தொடரும் கன மழை: நீர் நிலைகளில் இருந்து வெளியேறும் முதலைகள்

மேலும், சியோபைன் மெக்டொனாக் நேற்றைய தினம் பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிற் கேமரூனுக்கு, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் வவுனியா மாவட்ட தலைவி சிவானந்தன் ஜெனிற்றாவின் கைது தொடர்பில் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டும் எனவும் அமைதியாக போராட்டம் மேற்கொண்ட போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் வடக்குக்கு வருகை தந்த இலங்கை ஜனாதிபதியை சந்தித்து தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் வினவ முற்பட்ட போதே ஜெனிட்டா கைது செய்யப்பட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவி கைது: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம் | Siobhan Mcdonough For Sri Lanka Police Action

அக்கடிதத்தில், “போரின் இறுதிக் காலத்தில் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டனர்.

மேலும் ஐக்கிய நாடுகளின் சபையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆணை குழு தமது 2020 அறிக்கையில் இலங்கை காணாமல் ஆக்கப்படுவோரின் பட்டியலில் இரண்டாவது இடத்தை வகிக்கின்றது” என சுட்டி காட்டினார்.

எதிர்ப்புப் போராட்டம்

வவுனியாவில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக கறுப்புக் கொடிகளை ஏந்தி போராட்டம் ஜனாதிபதியின் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்துக்குச் செல்லும் பாதையில் வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்குப் போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதிவான் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும் அவரும் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். 

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவி கைது: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம் | Siobhan Mcdonough For Sri Lanka Police Action

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்துக்குள் செல்ல முற்பட்டபோது அவர்களைத் தடுத்து நிறுத்திய பொலிஸார், ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்க முடியாது என்றும், ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்க முடியும் என்றும் தெரிவித்திருந்தனர். இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டது. இதனையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா மற்றும் போராட்டத்தை காணொளி எடுத்த மீரா ஜாஸ்மின் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, அவரைக் கைது செய்த நடவடிக்கையில் இரு பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த காரணத்தினால் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டிலும், நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டிலும் அவரை 12ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வட மாகாணத்தில் தொடரும் மருத்துவ சேவை ஊழியர்களின் போராட்டங்கள்

வட மாகாணத்தில் தொடரும் மருத்துவ சேவை ஊழியர்களின் போராட்டங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US