பதவி விலகினார் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனது கட்சிக்குள் எழுந்த கடும் அழுத்தம் காரணமாக அவர் இவ்வாறு பதவி விலகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைமைப் பதவியில் இருந்து விலகல்
தனது பதவி விலகல் குறித்து ஸ்டார்மர் குறிப்பிடுகையில், தான் எடுத்த ஒவ்வொரு முடிவும், நாட்டையும், மக்களையும் நேசிப்பதாக அவர்களை முன்னிறுத்தியே இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே, தான் பிரதமர் பதவியில் இருந்தும், லேபர் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும் விலகுவதாக அவர் இதன்போது அறிவித்தார்.
அத்துடன், இதுவரை நாட்களும் தனக்கு உறுதுணையாக இருந்த தனது மனைவிக்கு இதன்போது அவர் நன்றி தெரிவித்தார்.
YOU MAY LIKE THIS VIDEO