பிரித்தானிய இளவரசி வைத்தியசாலையில் அனுமதி
பிரித்தானிய(United Kingdom) இளவரசி ஏன்(Anne) குளோசெஸ்டர்ஷையரில், இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிறு காயங்கள் மற்றும் மூளையதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
73 வயதான இளவரசி ஏன்(Anne) தனது காட்கோம்பே பார்க் தோட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்திற்குப் பிறகு முழு மற்றும் விரைவான குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக பக்கிங்ஹாம் அரண்மனை குறிப்பிட்டுள்ளது.
காயத்திற்கான காரணம்
கண்காணிப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர் பிரிஸ்டலில் உள்ள சவுத்மீட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயத்திற்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை,
எனினும், அவரின் காயங்கள் குதிரை ஓட்டத்தின் போது குதிரையின் தலை அல்லது கால்களின் தாக்கத்தினால், ஏற்பட்டவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அத்துடன் இளவரசி ஏன், இந்த வார இறுதியில் கனடாவுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கவிருந்ததாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri