பிரித்தானிய இளவரசி வைத்தியசாலையில் அனுமதி
பிரித்தானிய(United Kingdom) இளவரசி ஏன்(Anne) குளோசெஸ்டர்ஷையரில், இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிறு காயங்கள் மற்றும் மூளையதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
73 வயதான இளவரசி ஏன்(Anne) தனது காட்கோம்பே பார்க் தோட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்திற்குப் பிறகு முழு மற்றும் விரைவான குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக பக்கிங்ஹாம் அரண்மனை குறிப்பிட்டுள்ளது.
காயத்திற்கான காரணம்
கண்காணிப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர் பிரிஸ்டலில் உள்ள சவுத்மீட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயத்திற்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை,
எனினும், அவரின் காயங்கள் குதிரை ஓட்டத்தின் போது குதிரையின் தலை அல்லது கால்களின் தாக்கத்தினால், ஏற்பட்டவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அத்துடன் இளவரசி ஏன், இந்த வார இறுதியில் கனடாவுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கவிருந்ததாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் இந்தியாவில் தயாரிப்பு News Lankasri

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri
