வெளிநாட்டு உளவுச் சேவையின் தலையீட்டுடன் இலங்கையில் குண்டுத்தாக்குதல்..! மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்

Nihal Talduwa Sri Lanka Sri Lankan Peoples Ministry of Defense Sri Lanka
By Mayuri Jul 05, 2022 02:49 AM GMT
Report

இலங்கையில் வடக்கில் அல்லது தெற்கில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என வெளியாகிய தகவல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த மாதம் பயங்கரவாத தாக்குதல் ஒன்று நடத்தப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி பாதுகாப்புச் செயலாளருக்கு, பொலிஸ்மா அதிபரால் அனுப்பப்பட்டதாக கூறப்படும் கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார கேள்வியெழுப்பியிருந்தார்.

வெளிநாட்டு உளவுச் சேவையின் தலையீட்டுடன் இலங்கையில் குண்டுத்தாக்குதல்..! மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல் | Bomb Blast In Srilanka Defense Ministry Statement

வடக்கு, தெற்கில் குண்டு வெடிக்கலாமென எச்சரிக்கை! நிகழ்வுகளில் பங்கேற்க ​வேண்டாமென அறிவுறுத்தல் - அநுர தகவல்

பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கறுப்பு ஜூலை தினத்தை நினைவு கூறும் வகையில் இந்த மாதம் 5ஆம் 6ஆம் திகதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சுட்டிக்காட்டும் கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

எனினும் இவ்வாறான தாக்குதல் ஒன்று நடத்தப்படுவதற்கான களநிலைமைகள் உறுதிப்படுத்தப்படவில்லை. பொது மக்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் முன்னுரிமையளிப்பதன் காரணமாக புலனாய்வு தரப்பினருக்கு கிடைத்த இந்த தகவல் குறித்து, விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வெளிநாட்டு உளவுச் சேவையின் தலையீட்டுடன் இலங்கையில் குண்டுத்தாக்குதல்..! மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல் | Bomb Blast In Srilanka Defense Ministry Statement

இந்த விடயம் குறித்த மக்கள் அச்சமடைய தேவையில்லை. தமது நாளாந்த நடவடிக்கைகளை வழமைப்போன்று மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம்! விடுதலைப் புலிகள் அமைப்பினை காரணம் காட்ட நடவடிக்கை - நாடாளுமன்றில் தகவல் 

பொலிஸ் ஊடப் பேச்சாளரின் விளக்கம்

இதேவேளை குறித்த கடிதம் தொடர்பில் ஊடகமொன்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவவிடம் கேள்வியெழுப்பியுள்ளது.

இதற்கு அவர் பதிலளிக்கையில், வடக்கு, கிழக்கு அல்லது தெற்கில் குண்டுத் தாக்குதலொன்றோ அல்லது நாசகார செயல்களோ, வெளிநாட்டு உளவுச் சேவை ஒன்றின் தலையீட்டுடன் இடம்பெறலாம் என்பது ஒரு தகவல் மட்டுமே.

வெளிநாட்டு உளவுச் சேவையின் தலையீட்டுடன் இலங்கையில் குண்டுத்தாக்குதல்..! மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல் | Bomb Blast In Srilanka Defense Ministry Statement

பொலிஸாருக்கு இவ்வாறான தகவல்கள் பல்வேறு நபர்களிடம் இருந்து கிடைக்கும். அவ்வாறு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்று தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டிருந்தமையால், அது தொடர்பில் பாதுகாப்புச் செயலருக்கு அறிவிக்கப்பட்டது. அது ஒரு தகவல் மட்டுமே.

அந்த தகவல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உறுதி செய்து கொள்வதற்காகவும், அனைத்து உளவுத் துறைகளுக்கும் பகிர்ந்து கொள்வதை நோக்கமாக கொண்டும் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட அந்த தகவல் பாதுகாப்பு செயலரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதனைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். 

அநுரவின் கருத்து

பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரட்னவின் கடிதம் நகைப்பிற்குரியது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜே.வி.வி, எதிர்க்கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை இலக்கு வைத்து தாக்கதல் நடாத்தப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

இந்தக் கடிதமே நகைப்பிற்குரிய கடிதமாக நோக்கப்பட வேண்டுமென அனுரகுமார தெரிவித்துதுள்ளார்.

இவ்வாறான நிலைமையை ஏற்படுத்துவதற்கு ஜே.வி.பி ஒருபோதும் செயற்படாது எனவும் இந்தக் கடிதம் மூலம் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் கருத்துக்களை மூடி மறைப்பதற்காக சமூகத்தை அச்சத்திற்கு உள்ளாக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அச்சுறுத்தல்கள் மூலம் நாட்டு மக்களின் எதிர்ப்பு அலைகளை கட்டுப்படுத்தி விட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளுக்கு அப்பால் சென்று அரசியல் நகைச்சுவைகளை வழங்குபவராக மாற வேண்டாம் என பொலிஸ் மா அதிபரிடம் கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏதேனும் ஓர் சூழ்ச்சியை செய்து அதன் பழியை அரசாங்கத்திற்கு எதிரான தரப்புக்கள் மீது சுமத்தும் சதித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US