பேரினவாத அரசின் அடக்கு முறைக்கு எதிராக சுவிட்சர்லாந்திலிருந்து அருட்தந்தை கடுமையான கண்டனம் (Video)
இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் சைவத் திருமறையின் புனித அடையாளங்கள் மற்றும் கோவில்கள் திட்டமிடப்பட்டு சிதைக்கப்படுவதற்கு எதிரான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகத்தின் அருட்தந்தை சூ.டக்ளஸ் மில்ரன் லோகு கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், இலங்கை நாட்டில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கில் பல்வேறு கால கட்டங்களில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி தமிழரின் கலை கலாசார சமய அடையாளங் களை அழித்தொழித்து அவர்களின் தனித்துவத்தைத் தகர்க்கும் கைங்கரியத்தைப் பேரினவாத ஆட்சியாளரின் துணையோடு விசம சக்திகள் மேற்கொண்டு வருவது கண்கூடு.
தற்போது அச் செயற்பாடுகள் வேகமடைந்து வருவதை நாம் கவலையோடு நோக்குகிறோம். சமயங்கள் ஒவ்வொன்றையும் அவற்றின் புனித இடங்கள், அடையாளங்களை மதிப்பதே மத நல்லிணக்கத்திற்கும் சுமுகமான வாழ்வுக்கும் வழிகோலும்.
இலங்கையின் வடக்கு - கிழக்கை சிங்களமயமாக்கல் மற்றும் அங்குள்ள சமய அடையாளங்களைச் சிதைத்து பெளத்தமயமாக்கல் போன்றன பெரும் கண்டனத்துக்குரியது.
இது தொடர்பான மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri