இலங்கையில் தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க இந்தியா வலியுறுத்த வேண்டும்

Sri Lankan Tamils Sri Lanka Politician United States of America Sri Lankan political crisis India
By Sivaa Mayuri Feb 26, 2023 12:53 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report

தமிழீழு விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் நிறுவுவதற்குப் பதிலாக இலங்கையில் தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டும் என்ற இந்தியா வலியுறுத்த வேண்டும் என அமெரிக்கத் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் இயங்கும் பைடனுக்கான தமிழர்கள் என்ற அமைப்பே இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.

13 ஆவது திருத்தம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர பரிவர்த்தனைகளின் விளைவாகும். அதுவும் தமிழர்களின் ஆலோசனை, பங்கேற்பு அல்லது ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட ஒன்றாகும்.

இலங்கையில் தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க இந்தியா வலியுறுத்த வேண்டும் | Tamil Sovereignty In Sri Lanka

13 ஆவது திருத்தம்

இந்தநிலையில் முழு தமிழின் இறையாண்மையை மீட்டெடுப்பதே இலங்கையில் இருந்து சீனத்தை அகற்றுவதற்கான சிறந்த வழியாகும்.

அவ்வாறு செய்தால், தமிழர்களைக் காப்பாற்றுவது என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்தியப் படையெடுப்பு குறித்து இலங்கையும் இனி பயப்படத் தேவையில்லை என்றும் பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு முதல் இறந்துவிட்டதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அண்மையில் வெளியாகியுள்ள செய்திகளுக்கு மத்தியில் பைடனுக்கான தமிழர்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க இந்தியா வலியுறுத்த வேண்டும் | Tamil Sovereignty In Sri Lanka

தமிழ் தேசிய இயக்கத் தலைவர்

கடந்த பெப்ரவரி 13  அன்று  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், விரைவில் அவர் பொது வெளியில் தோன்றுவார் என்றும் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்தார்.

பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள், இந்த செய்தி உண்மையோ இல்லையோ இலங்கை தீவில் பொருளாதார செல்வாக்கை அதிகரித்து வரும் சீனாவுக்கு பதிலாக அரசியல் வழிகாட்டுதலுக்காக இலங்கையை இந்தியாவை நோக்கி திரும்புவதற்கான அழுத்தத்தை உருவாக்க கசிய விடப்பட்டதாக நம்புகின்றனர்.

இலங்கையில் இந்த அரசியல் செல்வாக்கு கடந்த ஆண்டு நிதி நெருக்கடி மற்றும் தீவிர அரசியல் உறுதியற்ற தன்மையுடன் அதிகரித்து வருகிறது போரின் போது இலங்கை, இந்தியக் கொள்கையை எதிர்த்தது.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செல்வாக்கு செலுத்துவதற்காக, தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கியதன் மூலமும் இந்தியா தமிழர் விடுதலை இயக்கத்தை ஆதரித்தது.

இலங்கையில் தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க இந்தியா வலியுறுத்த வேண்டும் | Tamil Sovereignty In Sri Lanka

எனினும் 2002 இல் விடுதலைப் புலிகள் போரில் வெற்றிபெறும் தருவாயில் இருந்தபோது, இந்தியா அந்த முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதுடன் தமிழ்ப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தி அதன் இராணுவ ஆதரவை விலக்கிக் கொண்டது.

சிங்கள ஒற்றையாட்சி

சிங்கள ஒற்றையாட்சியின் கீழ் தமிழ் மாகாண அதிகாரத்திற்கு உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை ஏற்படுத்திய 1987 இன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக 13வது திருத்தமே இதற்கான தீர்வு என்று இந்தியா வலியுறுத்துகிறது.

எனினும் நடைமுறையில், இது தமிழர்களுக்கு உண்மையான அதிகாரம் இல்லாத ஒரு போலி கூட்டாட்சியாகவே இருந்து வருகிறது.

இந்த 13வது திருத்தம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர பரிவர்த்தனைகளின் விளைவாகும், இது தமிழர்களின் ஆலோசனை, பங்கேற்பு அல்லது ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.

1987 இல், இந்திய அமைதி காக்கும் படை விடுதலைப் புலிகளை வலுக்கட்டாயமாக நிலைகுலையச் செய்ய முயன்று அவர்களுடன் முழு அளவிலான மோதலில் ஈடுபடும் நிலையை உருவாக்கியது.

இது 1990ல் நேரடியாக இந்தியப் படைகள் இலங்கையை விட்டு வெளியேற வழிவகுத்தது. இலங்கை ஜனாதிபதி பிரேமதாச சமாதானப் பேச்சுக்களை கைவிட்டு விடுதலைப் புலிகளை வேரறுக்க முயன்றதை அடுத்து, இலங்கைத் தீவில் உள்நாட்டுப் போர் மீண்டும் தொடங்கியது.

இலங்கையில் தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க இந்தியா வலியுறுத்த வேண்டும் | Tamil Sovereignty In Sri Lanka

இந்தநிலையில் 13வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 35 வருடங்கள் கடந்துள்ள போதிலும் அதன் விதிகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

1983 முதல் 2009 ஆம் ஆண்டு வரை வடகிழக்கு இலங்கையை விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது, சீனாவின் பிரசன்னம் இலங்கை தீவில் இருக்கவில்லை.

சீனர்களை விரட்டியடிக்க உதவும்

இப்போது விடுதலைப் புலிகள் திரும்புவதும், இலங்கையில் போர் மூளுவதும் சீனர்களை விரட்டியடிக்க உதவும் என்று இந்தியா நினைக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை, முழு தமிழ் இறையாண்மையை மீட்டெடுப்பதே சீனர்களை அகற்றுவதற்கான சிறந்த வழியாகும்.

இலங்கையில் தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க இந்தியா வலியுறுத்த வேண்டும் | Tamil Sovereignty In Sri Lanka

அதேநேரம் சுதந்திர தமிழ் அரசு என்ற யதார்த்தத்தை சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், தமிழர்களைக் காப்பாற்றுவோம் என்ற பெயரில் நடத்தப்படும் இந்தியப் படையெடுப்புக்கு இலங்கையர்கள் இனி பயப்படத் தேவையில்லை.

அத்துடன் சீனா மற்றும் இந்தியாவின் அரசியல் சூழ்ச்சிகளிலிருந்து விடுபட்டு, சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் நட்பு அண்டை நாடுகளாக இருக்க முடியும்.

அது இலங்கைத் தீவின் அமைதியானது பிராந்தியம் முழுவதும் புவிசார் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும் என்றும் பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
நன்றி நவிலல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Milton, Canada

16 Jan, 2026
நன்றி நவிலல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US