விரைவில் சிக்கப் போகும் பௌத்த தேரர்.. ரகித ராஜபக்ச - சரித் அபேசிங்க வழக்கில் அதிரடி திருப்பம்!
ஹரக் கட்டாவின் மனைவியிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் 120 மில்லியன் ரூபா இலஞ்சப் பணத்தின் ஒரு பகுதி, பௌத்த தேரர் ஒருவர் ஊடாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்குக் கைமாற்றப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் விசாரணையாளர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நேற்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
ரகித ராஜபக்ச, சரித் அபேசிங்க மற்றும் அருண் வருஷஹென்னடிகே ஆகியோருக்கு எதிரான வழக்கு, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கைமாற்றப்பட்ட பணம்..
இந்த விவகாரத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பௌத்த தேரரை விசாரணையாளர்கள் தற்போது அடையாளம் கண்டுள்ளதாகவும், நீதிமன்றத்திற்கு மேலதிக விபரங்களை அறிக்கை செய்வதற்கு முன்னர் அந்தத் தகவல்களை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்சப் பணத்தை வழங்கியதாகக் கூறப்படும் ஹரக் கட்டாவின் மனைவியிடமிருந்து பதிவு செய்யப்பட்ட காணொளி வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன், இலஞ்சப் பணத்திற்கு ஈடாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதமை தொடர்பில் ஹரக் கட்டாவின் மனைவிக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல்கள் அடங்கிய தொலைபேசி ஒன்றையும் விசாரணையாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வழக்குடன் தொடர்புடைய நபர்களுக்கு இடையே 1,300இற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் பரிமாறப்பட்டுள்ளதை விசாரணைகள் மூலம் கண்டறிந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
பெறப்பட்ட வாக்குமூலங்கள்..
மேலும், இந்த இலஞ்ச விவகாரம் குறித்து கலந்துரையாடுவதற்காக மூன்று சந்தேக நபர்களும் ஒன்றாக இந்தியாவுக்குச் சென்றதாக முன்னர் சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குடிவரவு குடியகல்வுத் திணைக்களப் பதிவுகளின்படி, சந்தேக நபர்கள் மூவரும் 2023 மார்ச் 3 ஆம் திகதி ஒரே விமானத்தில் இந்தியாவுக்குப் பயணித்து, மீண்டும் 2023 மார்ச் 7ஆம் திகதி ஒன்றாகவே இலங்கைக்குத் திரும்பியுள்ளனர்.
இதே மூன்று சந்தேக நபர்களுடன் தொடர்புடைய மற்றுமொரு தனிப்பட்ட இலஞ்சச் சம்பவம் குறித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு இன்னுமொரு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பில் புதிய விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri