கிழக்கில் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள்

Ampara Batticaloa Weather Floods In Sri Lanka
By Rusath Jan 19, 2024 06:52 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான வடகீழ் பருவப்பெயர்ச்சி மழையினால் மீண்டும் தாழ் நிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் இன்று(19.01.2024) அதிகாலை வேளையிலிருந்து மீண்டும் பலத்த மழை பொழிய ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் கடந்தவாரம் முதல் பெய்துவந்த பலத்த மழை வீழ்ச்சியால் தேங்கியுள்ள வெள்ள நீர் வற்றாத நிலையில் இன்றும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மீண்டும் வெள்ள நிலமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் புதிய விசா திட்டங்கள் அறிமுகம்

இலங்கையில் புதிய விசா திட்டங்கள் அறிமுகம்

குளங்களின் நீர்மட்டங்கள்

மக்கள் குடியிருப்புக்களிலும், வீதிகளிலும், மீண்டும் மழைநீர் தேக்கமடைந்து வழிந்தோட முடியாத நிலமை ஏற்பட்டடுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில அமைந்துள்ள குளங்களின் நீர்மட்டங்களின் நிலமை தொடர்பிலும் பொறியியலாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.


அதன் படி இன்று(19.01.2024) காலை 7 மணிவரையில் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 31அடி 3அங்குலமும், உறுகாமம் உளத்தின் நீர்மட்டம் 13அடி 9அங்குலமும், வாகனேரிக் குளத்தின் நீரமட்டம் 18அடி 10 அங்குலமும், கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 6அங்குலமும், கித்துள்வெவக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 7அங்குலமும், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 15அடி 2அங்குலமும், வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 12அடி 3 அங்குலமும், நவகிரிக்குத்தின் நீர்மட்டம் 29அடி 6அங்குலமும், தும்பங்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 17அடி 3அங்குலமுமாக உயர்ந்துள்ளதாக குறித்த குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கில் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள் | Batticaloa Flooded Again Due To Rain

இந்நிலையில் உன்னிச்சைப் பகுதியில் 3.5மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 17மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 26.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கட்டுமுறிவு பகுதியில் 12 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 24 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அம்பாறை மாவட்டம்

அம்பாறையில் மழையுடன் கூடிய காலநிலை மாற்றம் திடீரென ஏற்பட்டமையினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று ஆரம்பித்த மழை வீழ்ச்சி அதிகாலை முதல் பலத்த மழையாக மாறி வருவதுடன் வானம் இருள் சூழந்து மப்பும் மந்தாரமுமாக காணப்படுகின்றது.

காற்றுடன் கூடிய காலநிலை

குறிப்பாக நாவிதன்வெளி ,கல்முனை முஸ்லிம் பிரிவு, தமிழ் உப பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதான போக்குவரத்து பாதைகள் சில வெள்ளக்காடாக காட்சி தருவதனால் தூர இடங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளதோடு உள்ளூர் வீதிகள் அனைத்திலும் நீர் நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக மக்களது அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெரியநீலாவணை, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, நிந்தவூர், சம்மாந்துறை, பகுதிகளில் கடும் மழையுடன் காற்று வீசியதனால் வீதியால் பயணம் செய்த பொதுமக்கள் வாகன சாரதிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கிழக்கில் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள் | Batticaloa Flooded Again Due To Rain

வயல் நிலங்களில் மழை நீர்

பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு வரை காலை வேளையில் அண்மையில் பனி மூட்டம் காணப்பட்ட போதிலும் தற்போது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் பலத்த காற்று வீசி வருகின்றது.

கிழக்கில் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள் | Batticaloa Flooded Again Due To Rain

அத்துடன் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான மழை பெய்ததன் காரணமாக வயல் நிலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதனால் நெல் அறுவடையில் ஈடுபடுவது சிரமமாக உள்ளதாகவும் ஏனைய போகங்களை விட இப்பெரும் போகத்தில் விளைச்சல் குறைவடைந்துள்ளதால் பாரிய நட்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் அடுத்த சிறுபோகத்தில் மீண்டும் எவ்வாறு நெற்செய்கையில் ஈடுபடுவது என்பது பற்றி பிரதேச விவசாயிகள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

செய்தி-பாறுக் ஷிஹான்

கிளிநொச்சியில் தொடருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் தொடருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US