மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய மலையகம் - இன்று 40 குடும்பங்கள் பாதிப்பு..!
ஹட்டன் மற்றும் கொட்டக்கலை பகுதியில் நேற்று(02.08.2026) இரவு முதல் பெய்த அடை மழையால் வெள்ளநீர் புகுந்துள்ளதால் கொட்டகலை லொக்கில் பகுதியில் சுமார் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன், பாதசாரிகள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் கவனத்திற்கு..
மேலும், தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும்படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளது.

அந்த வீடுகளில் வசிப்பவர்கள் தற்காலிகமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதேவேளை, தொடர் கனமழையின் காரணமாக ஹட்டன், நுவரெலியா மற்றும் ஹட்டன், கொழும்பு போன்ற பிரதான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் மலையகப் பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




