திலிணி பிரியமாலிக்கு பிணை வழங்கி உத்தரவு
ஹோமாகம பொலிஸாரினால் இன்று(28) காலை கைது செய்யப்பட்ட பிரபல வர்த்தகர் திலிணி பிரியமாலிக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹோமாகம நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட அறிவித்தல் ஒன்றை கையளிக்க சென்றிருந்த நீதிமன்ற ஊழியருக்கு கடமையை செய்ய விடாமல் தடுத்து அச்சுறுத்தல் விடுத்ததாக திலிணி பிரியமாலி குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டிருந்தது.
அதனையடுத்து, திலிணிக்கு பொலிஸில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு கடந்த 14ஆம் திகதி ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சரீரப் பிணைகள்
அதன் பிரகாரம் இன்று காலை பொலிஸ் நிலையம் வருகை தந்திருந்த திலிணி பிரியமாலி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

எனினும், இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவித்து ஹோமாகம மஜிஸ்திரேட் ரஜிந்தா விக்ரமசூரிய உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam