இனிப்பு கலந்த பானங்களை பருகுவதை தவிர்க்கவும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலையில் செயற்கை இனிப்பு கலந்த பானங்களை குடிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
செயற்கை இனிப்பு பானங்களை குடிப்பதால் தண்ணீர் குடிக்க வேண்டிய தேவை அதிகரிக்கும் எனவும், செயற்கை இனிப்பு பானங்களில் அதிகளவு சர்க்கரை இருப்பதே இதற்குக் காரணம் எனவும் கூறியுள்ளார்.
வெப்பமான காலநிலையில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைப்பது மிகவும் முக்கியம் என்பதுடன், கடினமான செயல்களை முடிந்தவரை தவிர்ப்பது மிகவும் அவசியம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
குழந்தைகளின் ஆரோக்கியம்
தற்போதைய சூழ்நிலையில், இயற்கையான பானங்களை தயாரித்து பருகுவது மிகவும் அவசியம் எனவும், முடிந்தவரை குளிர்ந்த நீர், பல்வேறு வகையான பழச்சாறுகள் போன்ற இயற்கை பானங்களை அருந்துவது மிகவும் அவசியம்.
இதேவேளை, நாளொன்றுக்கு பல தடவைகள் குளிர்ந்த நீரால் உடலை நனைப்பது மிகவும் அவசியம் எனவும், ஆரோக்கியமான குழந்தைகளை முடிந்தவரை தண்ணீரில் வைத்திருப்பது அவசியம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
