யாழில் இராணுவத்தினரை கிண்டலடித்து சர்ச்சையை ஏற்படுத்திய இளைஞன்
யாழில் (Jaffna) இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து பகுதியளவில் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் கடமையில் நின்ற இராணுவத்தினரை காணொளி எடுத்து கிண்டலடித்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பலாலி வடக்கு பகுதியில் அண்மையில் பகுதியளவில் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்த இளைஞரொருவர் இராணுவ முகாமில் கடமையில் நின்ற இராணுவ வீரரை காணொளி எடுத்ததோடு “டுப்பு டுப்புனு சுடுறீங்களா? உண்மையான துவக்கா” என கிண்டலடித்துள்ளார்.
கடமையில் இருக்கும் இராணுவத்தினரை காணொளி எடுத்து நக்கலடித்து அதனை சமூக ஊடகத்தில் பகிர்ந்தமை தொடர்பில் பலரும் தமது விமர்சனங்களை தெரிவித்துவருகின்றனர்.

உரிய கவனம்
இந்நிலையில், இவ்வாறு சட்ட வரையறைகளை மீறுபவர்கள் தொடர்பில் உரியவர்கள் கவனம் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan