விருந்துக்கு வருமாறு அழைத்து கணவன் மனைவியை தாக்கிய நபர்கள்:பெண் மரணம்
கணவன் மற்றும் மனைவியை விருந்துக்கு வருமாறு அழைத்து பொருப்பன பாலத்திற்கு அருகில் கூரிய ஆயுதங்களில் தாக்கியதில் பெண் உயிரிழந்துள்ளார்.
அவரது கணவர் படுகாயமடைந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விருந்துக்கு செல்ல பாலத்திற்கு அருகில் வருமாறு அழைத்த சந்தேக நபர்கள்

விருந்து ஒன்றில் கலந்துக்கொள்ள செல்வதற்காக பொருப்பன பாலத்திற்கு அருகில் வருமாறு கூறி கணவன், மனைவியை அந்த இடத்திற்கு வரவழைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். அப்போது பிரதேசவாசிகள் அந்த இடத்திற்கு சென்றுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.
ஒரு சந்தேக நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பிரதேசவாசிகள்

தப்பிச் செல்ல முயற்சித்தவர்களில் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பிடிப்பட்ட நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் கொல்லப்பட்ட பெண் 34 வயதானவர் எனவும் படோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த அவர் பொரலஸ்கமுவை விகாரை மாவத்தையில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri