கிளிநாச்சி குளத்தில் பரவும் நீர் தாவரங்களை விரைவாக அகற்ற நடவடிக்கை
கிளிநாச்சி குளத்தில் பரவி வருகின்ற ஆகாயத்தாமரை உள்ளிட்ட நீர் தாவரங்களை விரைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மாகாண விவசாய ஆராய்ச்சி பிரிவின் மேலதிக பணிப்பாளர் எஸ்.ராஜேஸ்கண்ணா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள கிளிநொச்சி குளத்தில் வேகமாக படர்ந்து வரும் ஆகாயத்தாமரை உள்ளிட்ட நீர் தாவரங்களை அகற்றி தருமாறு பல்வேறு தரப்புக்களாலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாசடையும் குளத்தின் நீர்
கிளிநொச்சி குளத்தில் தற்போது ஆகாயத்தாமரை மற்றும் சல்பீனீயா என்பன மிக வேகமாக பரவி வருகின்றது, இதனால் குளத்தின் நீர் மாசடைவதுடன் பல்வேறு பாதிப்புகளையும் எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதாவது குறிப்பாக இக்குளத்தினை நம்பி வாழும் நன்னீர் மீன்பிடி தொழிலாளர்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியாமலுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்திற்கான குடிநீர் விநியோகம் இக்குளத்தில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்ற குளமாகவும் இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலா தளமாக காணப்படுகின்ற குளத்தில் இவ்வாறு நீர்த் தாவரங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் இதனை அகற்றி தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை முன்வைப்பு
நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்திலும் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் மாவட்ட விவசாய ஆராய்ச்சி பிரிவின் மேலதிக பணிப்பாளர் எஸ்.ராஜேஸ்கண்ணா இன்றைய தினம் குறித்த குளத்தினை நேரடியாக பார்வையிட்டதுடன் நீர்த் தாவரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக களை நாசினிகளை பயன்படுத்தி இக்களைகளை கட்டுப்படுத்த முடியாது. உயிரியல் முறையிலேயே கட்டுப்படுத்தல் முறைகளை செய்ய வேண்டும் என்றும், அது தொடர்பான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறியவர்கள் முதல் பெரியோர் வரை ஆடைகளின்றி அடித்து கொலை செய்யப்பட்ட துயரம்! சபையில் நீண்ட வெளிப்படுத்தல்

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

உக்ரைன் யுத்தத்திற்கு உயர் தொழில்நுட்பம் அனுப்பியவர்கள் மீது பிரித்தானியா பொருளாதார தடை News Lankasri

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம் News Lankasri
