தமிழ் மொழி உரிமை பாதுகாப்பு! சகலருக்கும் சார்பான புதிய அரசமைப்பு: அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனம்
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவதுடன் அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும்போது அவருக்கு தமிழ் மொழியில் பதிலளிப்பதைக் கட்டாயமாக்குவோம் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். '
வளமான நாடு – அழகான வாழ்க்கை' எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்கவினால் நேற்று திங்கட்கிழமை கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதன்போது தேர்தல் விஞ்ஞாபனத்தை மத தலைவர்களுக்கு வழங்கிய பின்னர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளா. அவர் மேலும் உரையாற்றுகையில்,

புதிய அரசமைப்பு
"நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்குப் பதிலாக மாற்று முறைமையைச் செயற்படுத்துவோம். அனைத்து மக்களுக்கும் சார்பான வகையில் புதிய அரசமைப்பை உருவாக்குவோம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டவாட்சி கோட்பாட்டை செயல் வடிவில் நடைமுறைபடுத்துவோம்.
புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்காக 2015 -2019 வரையான காலப்பகுதியில் முன்னெடுத்த செயற்பாடுகளை முடிவுறுத்தி, அனைத்து இன மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையிலான புதிய அரசமைப்பை உருவாக்குவோம். தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம்.

அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதி
அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும்போது அவருக்குத் தமிழ் மொழியில் பதிலளிப்பதைக் கட்டாயமாக்குவோம். அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்து உண்ணும் நிலைமை மாற்றம் பெற வேண்டும்.
தேசிய உணவு உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தைக் கட்டம் கட்டடமாகச் செயற்படுத்துவோம். பொருளாதார முன்னேற்றத்தின் பிரதி பலனை நியாயமான முறையில் பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிப்போம். நடுத்தர மக்களை ஏழ்மையில் வைத்துக்கொண்டு நாட்டை முன்னேற்ற முடியாது.
பாடசாலை கல்விக் கட்டமைப்பை மறுசீரமைப்போம். உணவு, கல்வி, சுகாதாரம் என்பவற்றுக்கான வற் வரியை நீக்குவோம். நீர் மற்றும் மின்சாரக் கட்டணத்தையும் குறைப்போம்." என்றும் தெரிவித்துள்ளார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri