அனுராதபுரத்தில் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை
அனுராதபுரம், சாலியபுர - தெப்பங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
திடீரென ஏற்பட்ட தர்க்கம்
வீட்டின் உரிமையாளருக்கும், வீட்டுக்கு வருகை தந்த நபர் ஒருவருக்கும் இடையில் திடீரென ஏற்பட்ட தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது.

இதன்போது ஆத்திரமடைந்த வீட்டு உரிமையாளர், கூரிய ஆயுதத்தால் அந்த நபரைத் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சாலியபுர பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸார் தீவிர விசாரணை
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய வீட்டு உரிமையாளரை அனுராதபுரம் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri