கனடாவில் 10 எம்பிக்களை உருவாக்குவதில் அநுரவின் இரகசிய நகர்வு..
கனடாவிற்கு கடந்த ஆண்டு ஜனாதிபதி அநுர விஜயம் மேற்கொண்டிருந்தார்.இந்த விஜயமானது கனடாவிலுள்ள சிங்கள மக்களிடம் எழுச்சியையும் திரட்சியையும் ஏற்படுத்தியிருந்தது என்று கனடா அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“அதனை தொடர்ந்து அங்கு ஒரு வலையமைப்புகள் உருவாக்கப்பட்டு பல செய்திகள் பரிமாறப்பட்டு வருகின்றன.
தங்கள் சார்ந்த ஒரு சமூகத்தில் முன்னெடுப்பை அவர்கள் செய்கின்றார்கள்.
10 நாடாளுமன்ற உறுப்பினர்களை தங்களுடைய சமூகம் சார்ந்தவர்களாக கனடாவில் உருவாக்க வேண்டும், என்ற பொறிமுறையை உருவாக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறார்கள்” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 15 மணி நேரம் முன்

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்கள்... பதிலளிக்க மறுத்த சீன இராணுவம் News Lankasri

விஜய் டிவி மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... அட இதுவும் சூப்பர் தான், என்ன தெரியுமா? Cineulagam
