கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்
கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் கடவுச்சீட்டு விநியோகம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கடவுச்சீட்டுகள் வழங்குவதில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளது.
விநியோகிக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டுகள்
கடந்த ஜனவரியில் 65,351 கடவுச்சீட்டுகளும், பெப்ரவரியில் 54,161 கடவுச்சீட்டுகளும், மார்ச்சில் 50,356 கடவுச்சீட்டுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இந்த காலாண்டில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 169,868 ஆகும். எனினும், 2025 ஜனவரியில் 53,216, பெப்ரவரயில் 74,402 மற்றும் மார்ச்சில் 77,128 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு, குறித்த காலாண்டில் விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் மொத்த எண்ணிக்கை 204,746 ஆகும்.
அதன்படி, முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கடவுச்சீட்டு விநியோகம் சுமார் 34,878 அளவில் குறைந்துள்ளது.
அதிலும் குறிப்பாக ஜனவரி மாதத்தைத் தவிர, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்த கடவுச்சீட்டு வழங்கல்கள் கணிசமாகக் குறைந்துள்ளன.
பெப்ரவரி மாத இறுதியில் மத்திய கிழக்கு மோதல்களால் ஏற்பட்ட ஸ்திரத்தன்மையே கடவுச்சீட்டு வழங்கல்களில் குறைவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி
அதே போன்று 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவது, நாட்டிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை குறைவுக்கு வழிவகுத்துள்ளது என்றும் நம்பப்படுகிறது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தரவுகளின்படி, ஜனவரி முதல் செப்டம்பர் 2025 வரை 609,446 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
சமீபத்திய காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட ஆண்டுகள் 2022 மற்றும் 2023 ஆகும்.
இந்த ஆண்டுகளில், முறையே 911,757 மற்றும் 908,722 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. இருப்பினும், 2024-ல் இது 586,970 ஆகக் குறைந்திருந்தது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 16 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan