பெல்லன்வில துப்பாக்கிச்சூடு! பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்
கொழும்பு - பெல்லன்வில பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பெல்லன்வில நடைபாதை நுழைவாயிலுக்கு அருகில் உள்ள உணவகமொன்றின் முன்னால் நின்றிருந்த உணவக உரிமையாளரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
திட்டமிட்ட கும்பல் மோதல்
துப்பாக்கிச் சூட்டின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச்சென்றிருந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 55 வயதுடைய நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்த துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட கும்பல் மோதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 'கொஸ் மல்லி' எனப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் உறவினர் எனவும் அவரது எதிர்த்தரப்பினரால் இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இரண்டு சந்தேகநபர்களும் கைது
கடந்த சில காலமாக கொஸ் மல்லி எனப்படும் பிரிவினருடன் மோதலில் ஈடுபட்டுள்ள படோவிட்ட அசங்க மற்றும் சண்டோ பிரிவினரால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர், நவகமுவவில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற ஒருவர் எனவும், மின்னேரியா இராணுவ முகாமிலிருந்து துப்பாக்கிகளை கடத்திய சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர் எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவத்தையடுத்து பொரலஸ்கமுவ பொலிஸார், கல்கிஸ்ஸ கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல விசாரணைப் பிரிவுகள் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில்,இரண்டு சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 17 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri