அரசியல் பழிவாங்கலில் அரசு ஈடுபடவில்லை! ஆளும் தரப்பு எச்சரிக்கை
அநுர அரசு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
“ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கடந்த காலங்களில் கோப்புகளைகளை மறைத்திருந்தனர்.
அரசியல் பழிவாங்கல்
அவற்றை மீள விசாரணைக்கு உட்படுத்தி எடுப்பதற்கு சிறிது காலம் செல்லும். சில விடயங்களுக்காகக் பிணை கிடைத்தாலும் வழக்கு விசாரணை தொடரும்.
பொலிஸார் உரிய வகையில் செயற்படுவார்கள் என நாம் நம்புகின்றோம். பொலிஸாருக்குரிய ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும்.
சிலர் கூறுவதுபோல் அநுர அரசு அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை. நடைபெற்றுள்ள சம்பவங்கள் தொடர்பில்தான் விசாரணைகள் முன்னோக்கிச் செல்கின்றன" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
