மோசமான வானிலையினால் தலவாக்கலையில் மரம் முறிவு - போக்குவரத்து பாதிப்பு
மலையக பகுதிகளில் தொடர் மழை, பலத்த காற்று மற்றும் கடுமையான பனிமூட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இன்று (02) காலை முதல் கடும் மழை மற்றும் காற்று காரணமாக நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியின் தலவாக்கலை சென் கிளயர் நீர்வீழ்ச்சி பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து ஒருவழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம்
இந்நிலையில் பிரதேசவாசிகளுடன் இணைந்து முறிந்து வீழ்ந்துள்ள மரத்தினை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் முதல் நுவரெலியா மற்றும் ஹட்டன் - கொழும்பு வரையிலான பிரதான வீதிகளில் மண் சரிவு அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மலைப்பிரதேசங்கள் மற்றும் பிரதான வீதிகளில் பயணம் செய்யும் போது சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.






எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri