தங்கையின் மோசமான காணொளியை பார்த்து அதிர்ச்சிக்குள்ளான சகோதரன்!
தங்கையின் மோசமான காணொளியை நண்பனின் கையடக்க தொலைபேசியில் பார்த்த சகோதரன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்த14 வயது நிரம்பிய மாணவியான தங்கை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மாணவியின் சகோதரர் அளித்த முறைப்பாட்டை அடுத்து, கந்தானை பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
நண்பரின் மோசமான செயற்பாடு
சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியை வாங்கி அவசர தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுத்த போதே குறித்த காணொளியை அவதானித்துள்ளார்.அதன் பின்னர் அவர் செய்த முறைப்பாட்டில் 19 வயது இளைஞரை கடந்த (3.01.2026) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்,முறைப்பாடு செய்த சகோதரரின் நண்பர் என்றும், அவர் குறித்த மாணவியுடன் சிறிது காலமாக காதல் உறவு கொண்டிருந்தமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் கையடக்க தொலைபேசியை கைப்பற்றி, அதில் உள்ள காணொளியை ஆராய்ந்து, குற்றத்தை உறுதிசெய்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
அதே நேரத்தில் வன்கொடுமைக்கு உள்ளான மாணவி வைத்திய பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 13 மணி நேரம் முன்
சுக்கிர பெயர்ச்சி 2026: பண நஷ்டம், குடும்ப சண்டை! நிலைகுலையப் போகும் 4 ராசிகள்! தப்பிக்க பரிகாரங்கள்! Manithan