யாழில் வன்முறை கும்பல் ஒன்றினால் வெற்றிலை வியாபாரி மீது தாக்குதல்
யாழ்ப்பாணம் - மருதனார்மடத்தில் வெற்றிலை வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வன்முறை சம்பவம் கடந்த வியாழக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 29 வயதுடைய நபரொருவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
தாக்குதல் சம்பவம்
குறித்த இளைஞன் வியாபாரத்தினை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்கின்ற வேளையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் நால்வரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்து நேற்றையதினம்(26) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அவர்களை விளக்குமறியலில் வைக்குமாறு நீதிமான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், இந்த தாக்குதல் சம்பவமானது முன்பகை காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri
