யாழில் மகளின் உயிரை காப்பாற்ற தாய் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை
யாழில் தனது மகளின் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உதவுமாறு தாயொருவர் உருக்கமான கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் - அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இரத்தினராசா டிலக்சனா என்ற யுவதி கடந்த 8 வருடங்களாக சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவருக்கு 19 வயதில் இந்த நோய் ஆரம்பித்துள்ளது. தற்போது இவரது வயது 27. இவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வாரத்தில் மூன்று தடவைகள் சுத்திகரிப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
உருக்கமான கோரிக்கை
இவரது தந்தை ஒரு கூலித் தொழிலாளி. சுத்திகரிப்பு சிகிச்சைக்கு செல்வதற்கு ஒரு நாளுக்கு மூவாயிரம் ரூபா செலவாகுவதாகவும், ஒரு மாதத்திற்கு 36 ஆயிரம் ரூபா செலவாகுவதாகவும் அவரது தாயார் தெரிவிக்கின்றார்.
அத்துடன், கடன் பெற்றே இந்த சிகிச்சையை மேற்கொள்வதாக
அவர் கூறுவதோடு குறித்த யுவதிக்கு மிக விரைவில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என
வைத்தியர்கள் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, தனது மகளின் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உதவுமாறு குறித்த தாயார் உருக்கமான கோரிக்கை முன்வைத்துள்ளார்.
ரத்தினராசா திலக்சனா
வர்த்தக வங்கி (Commercial bank) - 8239005448
சங்கானைக் கிளை (Chankanai branch)
தொலைபேசி இலக்கம் - +94767063064
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
