பிரித்தானியாவிற்கு விருந்தினர் விசாவில் செல்லும் இலங்கையர்களின் எதிர்காலம்
பிரித்தானியாவிற்கு விருந்தினர் விசாவில் செல்லும் இலங்கையர்களின் எதிர்காலம் கடும் நெருக்கடியில் உள்ளதாக பிரித்தானியாவின் மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
அதாவது இலங்கையர்களை பொருத்தமட்டில் பிரித்தானியாவில் பயன்படுத்தும் ஆங்கில மொழியில் கவனம் செலுத்தாமையினால் பிரித்தானியாவிற்கு விருந்தினர் விசாவில் செல்லும் இலங்கையர்களின் எதிர்காலம் இறுக்கமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்களின் கல்வி நிலையை விட அவர்களின் மொழி நடையில் பிரித்தானியா அதிகம் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் விருந்தினர் விசாவில் வரும் இலங்கையர்கள் பிரித்தானியாவிற்கு வந்த பின்னர் எந்தவித விசாவிற்கும் மாற முடியாது என்றும், இவர்கள் மீண்டும் நாடு திரும்பாமை அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam