பிரித்தானியாவிற்கு விருந்தினர் விசாவில் செல்லும் இலங்கையர்களின் எதிர்காலம்
பிரித்தானியாவிற்கு விருந்தினர் விசாவில் செல்லும் இலங்கையர்களின் எதிர்காலம் கடும் நெருக்கடியில் உள்ளதாக பிரித்தானியாவின் மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
அதாவது இலங்கையர்களை பொருத்தமட்டில் பிரித்தானியாவில் பயன்படுத்தும் ஆங்கில மொழியில் கவனம் செலுத்தாமையினால் பிரித்தானியாவிற்கு விருந்தினர் விசாவில் செல்லும் இலங்கையர்களின் எதிர்காலம் இறுக்கமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்களின் கல்வி நிலையை விட அவர்களின் மொழி நடையில் பிரித்தானியா அதிகம் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் விருந்தினர் விசாவில் வரும் இலங்கையர்கள் பிரித்தானியாவிற்கு வந்த பின்னர் எந்தவித விசாவிற்கும் மாற முடியாது என்றும், இவர்கள் மீண்டும் நாடு திரும்பாமை அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri