மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் 22 வயது இளைஞன் பலி
மன்னார் (Mannar) - தாழ்வுபாடு பிரதான வீதி டெலிக்கொம் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று (07.04.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஹட்டன் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய சந்திரகுமார் (சந்துரு) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இவர் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக மன்னார் மாவட்டத்தில் தொழில் நிமித்தம் உணவகங்களில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் விபத்து இடம் பெற்று சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதே இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
