லொறி மோதி 83 வயது பிக்கு பலி
பேராதனை, ரஜவத்த வீதியில் லொறி ஒன்றுடன் மோதி பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றுமுன்தினம்(16.05.2026) பேராதனையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற பௌத்த துறவி மீது அதிவேகமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாகப் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தாயகம் கோரிய உரிமைப் போராட்டத்தில் தன்னுயிர் நீத்த தமிழினத்தை நினைந்துருகுகிறது முள்ளிவாய்க்கால் - LIVE
பொலிஸார் மேலதிக விசாரணை
வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், வயது முதிர்வு மற்றும் காயங்களின் தீவிரம் காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் போவலவத்த பகுதியில் உள்ள ஆசிரமம் ஒன்றில் வசித்து வந்த 83 வயதுடைய துறவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக லொறியின் சாரதி பேராதனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து நடந்த விதம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிலும் 08 கோடி ஹெக்கிங்: பொறுப்பை ஏற்கப்போவதில்லை என பரபரப்பான அறிவிப்பு!இந்திய கிளையிலும் 22 மில்லியன் மோசடி
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 21 மணி நேரம் முன்
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி News Lankasri