முல்லைத்தீவில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை: 8 கடற்றொழிலாளர்கள் கைது!
முல்லைத்தீவு கடலில் சட்டவிரோதமாக கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 8 கடற்றொழிலாளர்களை கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது.
இந்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (19.04.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த வலியுறுத்தி 17.04.23 அன்று மாவட்ட கடற்றொழிலாளர்கள் கடற்படை தளத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், கடற்படையினருக்கு மனு ஒன்றினை கையளித்துள்ளார்கள்.
கடற்றொழிலாளர்கள்
இந்த நிலையில், கடற்படையினர் மற்றும் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களம் ஆகியன இணைந்து கடற்றொழிலாளர்களின் ஒத்துழைப்புடன், நாயாற்று கடற்பகுதியில் சட்டவிரோதமாகக் கடலில் ஒளிபாச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 4 படகுகளையும் 8 கடற்றொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களில் 6 பேர் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கொக்குளாய் பகுதியைச் சேர்ந்தவர் ஒருவரும், கறுக்குப்பனை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் ஆவர்.
நீதிமன்றில் முன்னிலை
கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது கடற்றொழிலாளர்கள் 8 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், கடற்றொழிலாளர்களின் சான்று பொருட்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri
