சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையை கட்டுப்படுத்துமாறு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்ட கடலில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம், கடல்வளம் அழிக்கப்படுவதாகவும் உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் அடங்கிய சங்கங்களில் மூன்று சங்கங்கள் இந்த தடை செய்யப்பட்ட தொழிலை அதிகமாக செய்வதாகவும், குறிப்பாக மாத்தளன் பகுதியிலேயே அதிகளவில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி உடந்தையாக காணப்படுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இவ்வாறான நடவடிக்கையினால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடல் வளம் அடியுடன் அழிக்கப்பட்டு வருவதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை
இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் எஸ்.கலிஸ்ரன் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையினை கட்டுபடுத்தவில்லை எனவும், இந்த பிரச்சினைக்கு மூன்று நாட்களுக்குள் தீர்வு தரவில்லை என்றால் அடுத்த கட்டம் வரும் பிரச்சினைக்கு நீங்கள் தான் பொறுப்பு எனவும் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி முன்னிலையில் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த நீண்ட காலமாக கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரையும் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

போர் தொடர்பான விடயங்களை துல்லியமாக கணிக்கும் ஜோதிடக்கலைஞர்: அமெரிக்கா குறித்து கணித்துள்ள விடயங்கள் News Lankasri

விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் பழைய ஹிட் சீரியல்கள்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam
