சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் பூரணமாக நிறுத்தப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடு
வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல், அனுமதியற்ற சுருக்கு வலை தொழிலில் ஈடுபடுதல் உட்பட நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாக சம்ந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது நீர் மற்றும் மின் கட்டண அதிகாரிப்பினால் ஏற்பட்ட உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் ஐஸ் கட்டிகளின் விலையை அதிகரிக்கும் கோரிக்கையை உற்பத்தியாளர்கள் முன்வைத்துள்ளதுடன் அது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ விஜயம்
இதேவேளை எதிர்வரும் 23,24,25 ஆகிய திகதிகளில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கடற்றொழில் செயற்பாடுகள் மற்றும் நீர்வேளாண்மை உற்பத்திகள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
இந்நிலையில் கடற்றொழில் அமைச்சிற்கு இன்று வருகைதந்த முன்னாள் அமைச்சர் மில்றோய் பெனான்டோ, சிநேகபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் பழைய ஹிட் சீரியல்கள்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri
