நாட்டில் அச்சுறுத்தலாக மாறிவரும் கோவிட் தொற்றால் மேலும் பலர் உயிரிழப்பு
நேற்றைய தினத்தில் (17) மாத்திரம் நாட்டில் 55 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்ததகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,480 ஆக அதிகரித்துள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர்களில் 23 பெண்களும் 32 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, இன்றைய தினத்தில் இதுவரை 1,825 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 234,624 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மொத்த கோவிட் தொற்றாளர்களில் 197,259 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.